தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை

தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
Published on

அறந்தாங்கி அருகே புறங்காட்டை சேர்ந்தவர் செந்தில் (வயது 43). தொழிலாளி. இவர், அடிக்கடி மதுகுடித்து விட்டு வந்து வீட்டில் தகராறு செய்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மரத்தில் அவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில் நேற்று பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com