பாலத்தின் கீழ் தொழிலாளி பிணம்

பாலத்தின் கீழ் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
பாலத்தின் கீழ் தொழிலாளி பிணம்
Published on

அலங்காநல்லூர், 

அலங்காநல்லூர் அருகே உள்ள கோட்டைமேடு பகுதியை சேர்ந்தவர் நாராயணன் (வயது 46). கட்டிட தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு நாராயணன் மெய்யப்பன்பட்டி பகுதியில் உள்ள ஓடை பாலத்தில் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று காலையில் பாலத்திற்கு அடியில் நாராயணன் பிணமாக கிடப்பதாக அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் மற்றும் போலீசார் அங்கு சென்று நாராயணன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாராயணன் எப்படி இறந்தார்? என விசாரித்து வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com