கன்னிவாடி அருகே கிணற்றில் தொழிலாளி பிணம்

கன்னிவாடி அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக கிடந்தார்.
கன்னிவாடி அருகே கிணற்றில் தொழிலாளி பிணம்
Published on

கன்னிவாடி அருகே குட்டத்துப்பட்டி, புளியராஜக்காபட்டியை சேர்ந்தவர் முருகன் (வயது 55). கூலித்தொழிலாளி. இவருக்கு மரியா என்ற மனைவியும், 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு முருகன் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். இந்தநிலையில் அதே ஊரில் உள்ள தோட்டத்து கிணற்றில் முருகன் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக திண்டுக்கல் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீசார் மற்றும் தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து, கிணற்றில் மிதந்த முருகனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. முருகன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா? கிணற்றில் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com