விஷம் குடித்து தொழிலாளி சாவு

நாகூரில் விஷம் குடித்து தொழிலாளி சாவு
விஷம் குடித்து தொழிலாளி சாவு
Published on

நாகூர்:

நாகூர் தோணிக்கார தெருவை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது40). தொழிலாளி. வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த இவர் சம்பவத்தன்று பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயராமன் சிகிச்சை நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com