வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரி கன்வேயர் பெல்ட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு

வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரி கன்வேயர் பெல்ட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
வடசென்னை அனல் மின்நிலையத்தில் நிலக்கரி கன்வேயர் பெல்ட்டில் இருந்து தவறி விழுந்த தொழிலாளி சாவு
Published on

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் பரசுராம்சிங் (வயது 24). இவர், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகரில் தங்கி, வடசென்னை அனல்மின் நிலைய 2-வது யூனிட்டில் கரி கையாளும் பிரிவில் தனியார் ஒப்பந்த நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை சுமார் 30 அடி உயரமுள்ள கன்வேயர் பெல்ட்டில் நிலக்கரியை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது திடீரென தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், பரசுராம்சிங் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி தகவலறிந்து வந்த மீஞ்சூர் போலீசார் பலியான பரசுராம்சிங்கின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com