தொழிலாளி மர்ம சாவு

திருவட்டார் அருகே தொழிலாளி மர்ம சாவு
தொழிலாளி மர்ம சாவு
Published on

திருவட்டார், 

திருவட்டார் அருகே உள்ள அருவிக்கரை அணைக்கரை பகுதியை சேர்ந்தவர் தங்கப்பன். இவருடைய மகன் கிங்ஸ்லின் சுபித் (வயது 35). கூலி தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. கிங்ஸ்லின் சுபித்துக்கு மது குடிக்கும் பழக்கம் உண்டு.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு அவர் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்தார். இதை குடும்பத்தினர் கண்டித்துள்ளனர். இதனால் உணவருந்திவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் பரளியாற்றின் கரையோர அருவிக்கரை பார்க் பகுதியில் ஒரு தோட்டத்தில் கிங்ஸ்லின் சுபித் மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்தவர்கள் அவரது உறவினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து கிங்ஸ்லின் சுபித்தை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் கிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து திருவட்டார் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்குப்பதிவு செய்து கிங்ஸ்லின் சுபித் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு காரணம் உண்டா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com