குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி

வில்லுக்குறி அருகே குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
குளத்தில் மூழ்கி தொழிலாளி பலி
Published on

திங்கள்சந்தை, 

திங்கள்சந்தை அருகே உள்ள ஆரோக்கியபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆல்பின் பெனட் (வயது45), கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவியும் 2 குழந்தைகளும் உண்டு. இவரது மனைவி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். அதன்பின்பு ஆல்பின் பெனட் தனது 2 குழந்தைகளுடன் மாடத்தட்டுவிளையில் உள்ள தனது சகோதரி வீட்டில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் மாலையில் ஆல்பின் பெனட் மாடத்தட்டுவிளையில் உள்ள மாவடிகுளத்திற்கு குளிக்க சென்றார். குளத்தில் இறங்கிய போது அவருக்கு திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் தண்ணீரில் மூழ்கிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com