மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

சேந்தமங்கலம் அருகே பாக்கு அறுவடை செய்யும் தொழிலாளி மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தார்.
மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Published on

சேந்தமங்கலம்

தொழிலாளி

சேலம் மாவட்டம் ஆத்தூர் தாலுகா தென்னங்குடி பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 37). இவர் பாக்கு அறுவடை செய்யும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி அமுல் (34). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இந்த நிலையில் நேற்று சுரேஷ்குமார் சேந்தமங்கலம் அருகே உள்ள பாண்டி ஆறு கிராமத்தை சேர்ந்த ஒரு விவசாயியின் தோட்டத்தில் பாக்கு அறுவடை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு எதிர்பாராதவிதமாக சுரேஷ்குமார் மீது மின்சாரம் தாக்கியது. இதில் மின்சாரம் தாக்கியதால் தூக்கி வீசப்பட்ட அவர் மயக்க நிலையில் கிடந்தார். அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவருடன் வேலை பார்த்த தொழிலாளர்கள் அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.

உயிரிழந்தார்

ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அந்த சம்பவம் குறித்து இறந்து போன சுரேஷ்குமாரின் மனைவி சேந்தமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

பாக்கு அறுவடை செய்யும்போது மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com