மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி

கீரம்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி தொழிலாளி பலி
Published on

பரமத்திவேலூர்

தொழிலாளி

நாமக்கல் தில்லைபுரம், காமராஜர் நகரைச் சேர்ந்தவர் ஞானசேகரன் (வயது 63). கூலித்தொழிலாளி. இவர் தனது மோட்டார் சைக்கிளில் நேற்று காலை பரமத்தி அருகே குஞ்சாம்பாளையத்தில் உள்ள அவரது மகனை பார்ப்பதற்காக வந்துள்ளார். மகனை பார்த்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு செல்ல தனது மோட்டார் சைக்கிளில் கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பைபாஸ் சாலையில் ஓரமாக கீரம்பூர் அருகே சென்று கொண்டிருந்தார்.

அப்போது கரூரில் இருந்து நாமக்கல் நோக்கி அதிவேகமாக சென்ற கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஞானசேகரன் மீது மோதி உருண்டு சாலையில் கவிழ்ந்தது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்து உயிருக்கு போராடியுள்ளார். மேலும் காரை ஓட்டி வந்த டிரைவர் பாலுசாமி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.

பலி

இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ஞானசேகரன் மற்றும் காயம் அடைந்த 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ஞானசேகரனை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் படுகாயம் அடைந்த 4 பேரும் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com