மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலி

பரமத்தி அருகே மொபட் மீது கார் மோதி தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.
மொபட் மீது கார் மோதி தொழிலாளி பலி
Published on

பரமத்திவேலூர்

தொழிலாளி பலி

பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள வில்லிபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 48). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பேபி (45). சுப்பிரமணி நேற்று காலை பரமத்தி அருகே உள்ள கோனூருக்கு தனது மொபட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து கந்தம்பாளையத்திற்கு தனது மொபட்டில் சாலை விதிகளை மீறி நாமக்கல்லில் இருந்து கரூர் செல்லும் சாலையில் வலது புறமாக சென்றார்.

அப்போது சேலத்தில் இருந்து கரூர் நோக்கி வந்த கார் ஒன்று எதிர்பாராத விதமாக சுப்பிரமணி மொபட் மீது மோதியது. இதில் அவர் தூக்கி வீசப்பட்டு தலையில் அடிபட்டு பலத்த காயமடைந்து உயிருக்கு போராடியுள்ளார். இதை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் சுப்பிரமணியத்தை காப்பாற்றி நாமக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் சுப்பிரமணி வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணை

தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுப்பிரமணி மீது மோதி விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் சேலம், சங்கர் நகரைச் சேர்ந்த மணிவண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com