கிணற்றில் தொழிலாளி பிணம்-போலீசார் விசாரணை

தூசி அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக மிதந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் தொழிலாளி பிணம்-போலீசார் விசாரணை
Published on

தூசி அருகே கிணற்றில் தொழிலாளி பிணமாக மிதந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெம்பாக்கம் தாலுகா தூசி அருகே உள்ள வாகை நத்த கொள்ளை கிராமத்தைச் சேர்ந்தவர் முரளிதரன் (வயது 50). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இவர் வாக்கிங் சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன்பின் இவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் இவரை பல்வேறு இடங்களில் தேடிப் பார்த்து வந்தனர்.

இந்த நிலையில் அதே கிராமத்தைச் சேர்ந்த தாண்டவராயன் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றில் முரளிதரன் இறந்து கிடப்பதாக தெரியவந்தது. தகவல் அறிந்த தூசி போலீசார் அங்கு சென்று முரளிதரன் உடலை மீட்டு காஞ்சீபுரம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்

இது குறித்து முரளிதரன் மனைவி சித்ரா புகார் கொடுத்தார். அதன்பேரில் தூசி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவருக்கு தர்ஷினி, நித்யா என்ற 2 மகள்கள் உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com