ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின்

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் - மு.க.ஸ்டாலின்
Published on

சென்னை,

உலகம் முழுவதும் இன்று (பிப்ரவரி 21) உலக தாய்மொழி தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் தமிழக முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக தாய்மொழி தினம் குறித்து டுவிட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

'உலகத் தாய்மொழி நாளில், தங்கள் மொழிகளைப் பாதுகாக்கவும் உரிமைகளை நிலைநாட்டவும் போராடிய தியாகியருக்கு எனது வணக்கத்தைச் செலுத்துகிறேன். அவர்களது தியாகத்தில் இருந்து பெறும் உணர்வெழுச்சி கொண்டு, ஒற்றை மொழியின் ஆதிக்கம் இன்றி - அனைத்து மொழிகளும் சமமாக நடத்தப்படும் அனைவருக்கும் சமமான இந்தியாவைக் காண நாம் அனைவரும் உறுதியேற்போம்' என்று தெரிவித்துள்ளார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com