ரூ.16 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்

நாமகிரிப்பேட்டையில் 250 மஞ்சள் மூட்டைகள் ரூ.16 லட்சத்துக்கு ஏலம் போனது.
ரூ.16 லட்சத்திற்கு மஞ்சள் ஏலம்
Published on

ராசிபுரம்

மஞ்சள் ஏலம்

ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் நேற்று மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

அதேபோல் ஒடுவன்குறிச்சி, ஈரோடு, சேலம், ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர். இதில் விரலி ரகம் 170 மூட்டைகளும், உருண்டை ரகம் 75 மூட்டைகளும், பனங்காலி ரகம் 5 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன.

ரூ.16 லட்சத்துக்கு விற்பனை

இதில் விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 869 முதல் அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 922-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.7 ஆயிரத்து 302-க்கும், அதிகபட்சமாக ரூ.11 ஆயிரத்து 989-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.10 ஆயிரத்து 99-க்கும், அதிகபட்சமாக ரூ.18 ஆயிரத்து 12-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 250 மஞ்சள் மூட்டைகள் ரூ.16 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com