தொடர் விடுமுறையையொட்டிஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்

தொடர் விடுமுறையையொட்டிஏற்காட்டில் குவிந்த சுற்றுலா பயணிகள்படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்
Published on

ஏற்காடு:

தொடர் விடுமுறையையொட்டி நேற்று ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

படகு இல்லம்

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சேலம் மாவட்டம் ஏற்காட்டில் உள்ள படகு இல்லம், ரோஜா தோட்டம், லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், சேர்வராயன் மலைக்கேவில், அண்ணா பூங்கா உள்ளிட்ட இயற்கை எழில்கொஞ்சும் இடங்களை சுற்றிப்பார்க்க சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று பண்டிகை மற்றும் பள்ளி அரையாண்டு தொடர் விடுமுறையையொட்டி ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்தனர். அவர்கள் அங்குள்ள பல்வேறு இடங்களுக்கு சென்று சுற்றிபார்த்தனர்.

பேக்குவரத்து நெரிசல்

பின்னர் படகு இல்லத்துக்கு சென்ற சுற்றுலா பயணிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் ஆனந்தமாக படகுசவாரி செய்தனர். அவ்வப்பேது மழை பெய்ததால் குளிர் நிலவியது. இதனால் சுற்றுலா பயணிகள் சுவர்ட்டர் அணிந்து சென்றதை பார்க்க முடிந்தது. சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரிப்பால் கடைகள், ஓட்டல்களில் விற்பனை படுஜோராக நடந்தது.

பண்டிகை மற்றும் விடுமுறை காரணமாக ஏற்காட்டிற்கு வாகனங்கள் அதிகளவில் வந்தததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஏற்காடு போலீசார் பாதுகாப்பு பணியை செய்தனர். 

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com