பூந்தமல்லி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை

பூந்தமல்லி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பூந்தமல்லி அருகே காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
Published on

பூந்தமல்லியை அடுத்த அகரமேல், எம்.ஜி.எம். நகரைச் சேர்ந்தவர் கருணாகரன் (வயது 33). இவருடைய மனைவி சத்யா (28). இருவரும் பூந்தமல்லியை அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் நர்சாக பணிபுரிந்து வந்தனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறியது. 2 வருடங்களுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு வயதில் கிஷாந்த் என்ற மகன் உள்ளான்.

இதற்கிடையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று காலை ஏற்பட்ட தகராறில் கருணாகரன், தனது காதல் மனைவி சத்யாவை அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் அவர், கணவருடன் கோபித்துக்கொண்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார்.

நீண்டநேரம் ஆகியும் அவர் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த கருணாகரன், ஜன்னல் வழியாக பார்த்தபோது, படுக்கை அறையில் சத்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து தகவல் அறிந்துவந்த நசரத்பேட்டை போலீசார், தூக்கில் தொங்கிய சத்யா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி கருணாகரனிடம் விசாரித்து வருகின்றனர்.

சத்யாவுக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் ஆர்.டி.ஓ. விசாரணைக்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com