வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது

வெங்கல் அருகே வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
வீடு புகுந்து கொள்ளையடித்த வழக்கில் வாலிபர் கைது
Published on

திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம் ஒன்றியம் வெங்கல் அருகே உள்ள கன்னிகாபுரம் கிராமம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் மஞ்சுளா (வயது 55) கணவரை இழந்த இவருக்கு 2 மகன்கள் உள்ளனர். இவர்கள் செங்கல் தொழிற்சாலை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், திருப்பதி கோவிலுக்கு நேர்த்தி கடன் செலுத்த மஞ்சுளா தனது மகன்களுடன் கடந்த சனிக்கிழமை சென்று இருந்தார்.

சாமி தரிசனம் செய்துவிட்டு அன்று இரவு வீட்டுக்கு வந்தபோது வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர் பீரோவில் இருந்த ஒரு பவுன் மோதிரம், ரொக்கப்பணம் ரூ.2 லட்சத்து 75 ஆயிரம், விலை உயர்ந்த செல்போன் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இது குறித்து மஞ்சுளா வெங்கல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னை கிண்டியை சேர்ந்த அரவிந்த் (37) என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார்.

அவர் கொடுத்த தகவலின்படி தங்க நகைகள், செல்போன், ரொக்கப்பணம் உள்ளிட்டவைகளை போலீசார் கைப்பற்றினர். விசாரணையில் அரவிந்த் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com