நெல்லை கீழப்பாட்டம் பகுதியை சேர்ந்தவர் சரவணமுத்து (வயது 26). இவர் சம்பவத்தன்று ஒரு பெண்ணிடம் தவறாக நடக்க முயன்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணமுத்துவை கைது செய்தனர்.