காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை

வாசுதேவநல்லூரில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாலிபர் தற்கொலை
Published on

வாசுதேவநல்லூர்:

வாசுதேவநல்லூர் ஆர்.சி. தெருவைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் மகன் கனகராஜ் (வயது 25). இவர் ஒரு பெண்ணை காதலித்ததாகவும். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் மனவேதனை அடைந்த கனகராஜ் தனது வீட்டில் தூக்கில் தொங்கினார். இதைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், கனகராஜ் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வாசுதேவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com