வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி

இளம்பெண்ணிடம் நேர்காணல் நடத்திய மர்மநபர்கள், பள்ளி ஆசிரியர் பணிக்கான போலி நியமன ஆணை வழங்கியுள்ளனர்.
வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக இளம்பெண்ணிடம் ரூ.1 லட்சம் மோசடி
Published on

நெல்லை,

நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் ஒருவர் வெளிநாட்டில் வேலைக்காக முயற்சி செய்து வந்தார். அதற்காக அவர் ஆன்லைனில் ஒரு ஏஜென்சி மூலம் விவரங்கள் சேகரித்தபோது, அதில் ஐக்கிய அரபு அமீரக நாட்டின் சார்ஜாவில் ஒரு பள்ளியில் ஆசிரியர் பணி காலியாக உள்ளதாக கூறி அந்த இளம்பெண்ணிடம் நேர்காணல் நடத்திய மர்மநபர்கள், பள்ளி ஆசிரியர் பணிக்கான போலி நியமன ஆணை வழங்கியுள்ளனர்.

மேலும் அவரிடம் சுமார் ரூ.1 லட்சம் வரை அனுப்ப சொல்லி அவரை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com