

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 2021-ம் வருடம் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட கீழநத்தம் மேலூரை சேர்ந்த தங்க மாயாண்டி (வயது 28) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார்.
மேற்சொன்ன வாலிபர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 3 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அந்த வாலிபருக்கு திருநெல்வேலி நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து தங்கமாயாண்டியை திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் தேடிவந்த நிலையில் நேற்று கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.