இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.
இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
Published on

இளம்பெண்ணை ஏமாற்றி 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

இளம்பெண்

வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த 26 வயது இளம்பெண் தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார். இவருக்கும் வாணியம்பாடியை சேர்ந்த கவுஸ்கான் (வயது 32) என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது. பின்னர் இருவரும் கடந்தாண்டு திருமணம் செய்து கொண்டனர். அந்த பெண் கர்ப்பமானார். இதையடுத்து கவுஸ்கான் அவரது கர்ப்பத்தை கலைக்குமாறு கூறினார். அதன்படி ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் கர்ப்பத்தை கலைத்தனர்.

இதையடுத்து அவர்கள் வாணியம்பாடியில் ஒரு வீட்டில் வசித்தனர். அப்போது கவுஸ்கானுக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளது அந்த பெண்ணுக்கு தெரியவந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கணவரிடம் அந்த பெண் கேட்டபோது அவரும், உறவினர்களும் துன்புறுத்தி உள்ளனர்.

பணம், நகை பறிப்பு

மேலும் அவர் அந்த பெண்ணிடம் இருந்து 15 பவுன் நகைகள், ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தை பறித்ததாகவும் கூறப்படுகிறது. தொடர்ந்து கொடுமைப்படுத்தி வந்ததால் அந்த பெண் வேலூர் கோட்டை அகழியில் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார்.

அதைத்தொடர்ந்து உறவினர்கள் அவருக்கு அறிவுரை வழங்கி முடிவை மாற்ற செய்தனர். இதனை தொடர்ந்து கவுஸ்கான் மீது வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அந்த பெண் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, கவுஸ்கானை நேற்று கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com