உரிமம் இன்றி பட்டாசு விற்ற வாலிபர் கைது

தூத்துக்குடி மாவட்டம், சேரகுளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம், சேரகுளம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சேரகுளம் பகுதியில் சுந்தரவேல் (வயது 32) என்பவர் உரிமம் இன்றி விற்பனைக்காக பட்டாசு வைத்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து சேரகுளம் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து சுந்தரவேலை கைது செய்தார். மேலும் அவரிடம் இருந்து உரிமம் இன்றி விற்பனைக்காக வைத்திருந்த பட்டாசுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
Group sites
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper) Archive Sitemap
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire





