

திருநெல்வேலி,
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில், கடந்த 30.5.2026 அன்று, கேசவனேரியை சேர்ந்த ராமகிருஷ்ணன் (வயது 41) தனது தோட்டத்தில் உள்ள கிணற்றில் காப்பர் வயர் திருடு போனதாக பணகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சோபியா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் வடலிவிளையைச் சேர்ந்த ஆல்வின்(27) என்பவர் காப்பர் வயரை திருடி சென்றது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து மேற்னெசான்ன சப்-இன்ஸ்பெக்டர் நேற்று ஆல்வினை கைது செய்து, நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறார்.