தாழையூத்தில் ஆடு திருடிய வாலிபர் கைது

தாழையூத்து பகுதியிலுள்ள காலி இடத்தில் 7 ஆடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, பால் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது அதிலிருந்து ஒரு ஆட்டை காணவில்லை.
திருநெல்வேலி
திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து, காமராஜ்நகரை சேர்ந்த இசக்கிமுத்து (வயது 31) என்பவர் 12.6.2024 அன்று தான் வளர்க்கும் 7 ஆடுகளை தாழையூத்து செல்வம்நகர் ரோட்டு பகுதியிலுள்ள காலி இடத்தில் மேய்ச்சலுக்கு விட்டு, பால் வியாபாரத்திற்கு சென்றுவிட்டு, திரும்பி வந்து பார்த்தபோது, அதிலிருந்து ஒரு ஆட்டை காணவில்லை.
இதுகுறித்து இசக்கிமுத்து தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சப்-இன்ஸ்பெக்டர் அருண்ராஜா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். அதில் தாழையூத்து, செல்வம்நகரை சேர்ந்த பாண்டி(44) என்பவர் ஆட்டை திருடி சென்றது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சப்-இன்ஸ்பெக்டர், பாண்டியை நேற்று கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார்.
Related Tags :
Next Story






