கோவில் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது

சிங்கப்பெருமாள் கோவில் அருகே கோவில் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கோவில் பூட்டை உடைத்து திருடிய வழக்கில் வாலிபர் கைது
Published on

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் அடுத்த மகேந்திரா சிட்டி கூட்ரோடு ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில் கடந்த 23-ந் தேதி இரவு கோவிலின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள் கோவிலில் இருந்த 16 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை மற்றும் 11 கிலோ எடை கொண்ட பித்தளை காமாட்சி குத்துவிளக்கு போன்றவற்றை திருடி சென்றனர். இதுகுறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் அடிப்படையில் சாமி சிலை மற்றும் குத்துவிளக்கு திருடிய நபர்களை தேடி வந்தனர். இந்த நிலையில் கோவிலின் பூட்டை உடைத்து 11 கிலோ காமாட்சி பித்தளை குத்துவிளக்கு திருடியதாக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் (27) என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து காமாட்சி பித்தளை குத்துவிளக்கை கைப்பற்றினர்.

தொடர்ந்து கார்த்திகை போலீசார் விசாரித்து வருகின்றனர். இதை வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com