போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

நெல்லையில் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
Published on

தென்காசி மாவட்டம் உடையாம்புளி நாராயணசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 25). இவர் சிறுமியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி அழைத்துச் சென்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் சீதபற்பநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். நெல்லை ஊரக அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதா விசாரணை நடத்தி, போக்சோ சட்டத்தின் கீழ் பிரபுவை கைது செய்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com