தூத்துக்குடி: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த வாலிபர், சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார்.
தூத்துக்குடி: சிறுமியிடம் அத்துமீறிய வாலிபர் போக்சோவில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே தெற்கு கோனார்கோட்டை, புதூர் கிழக்கு தெரு காலனியைச் சேர்ந்த குமார் மகன் மகேஷ்குமார் (வயது 21), ஒரு வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 13 வயது சிறுமியிடம் தகாத முறையில் நடக்க முயன்றுள்ளார். இதுதொடர்பாக சிறுமியின் பாட்டி அளித்த புகாரின்பேரில், கோவில்பட்டி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து, மகேஷ்குமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com