தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த ஒரு வாலிபர் தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் தொடர்புடையவர் ஆவார்.
தூத்துக்குடியில் பொதுச் சொத்தை சேதப்படுத்திய வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
Published on

தூத்துக்குடி மாவட்டம், முறப்பநாடு பகுதியில் கடந்த 13.9.2025 அன்று பொதுச் சொத்தை சேதப்படுத்திய வழக்கில் வல்லநாடு பாறைக்காடு பகுதியைச் சேர்ந்த கணபதி மகன் இசக்கிதுரை (வயது 27) என்பவர் சம்பந்தப்பட்டவர் ஆவார். இவரை மாவட்ட எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் பரிந்துரையின்படி மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின்பேரில் இன்று முறப்பாடு காவல் நிலைய போலீசார் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com