தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

வேலூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

வேலூர் அருகே செதுவாலை இந்திரா நகரை சேர்ந்தவர் தேசிங் மகன் சுரேஷ் (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி பவித்ரா (31). இவர்களுக்கு திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். சுரேசுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உள்ளது. இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி சுரேஷ் மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுரேஷ் வீட்டில் தூக்குப்போட்டு கொண்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு பொய்கை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com