தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

ஆரணி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
Published on

ஆரணி

ஆரணியை அடுத்த ராட்டினமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் தாரகேஸ்வரன். இவரது மகன் அசோக் சோம்ராஜ் (வயது 23). இவர் பி.இ. படித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார்.

இதனால் தாரகேஸ்வரன் மகனை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மனவிரக்தி அடைந்த அசோக் சோம்ராஜ் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு கொண்டார்.

பின்னர் குடும்பத்தினர் வீட்டுக்கு வந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

உடனடியாக அவரை மீட்டு ஆபத்தான நிலையில் ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு டாக்டர்கள் பரிசோதித்து, வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆரணி தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பி.புகழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com