மதுவிற்ற வாலிபர் கைது

ஜோலார்பேட்டையில் மதுவிற்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
மதுவிற்ற வாலிபர் கைது
Published on

ஜோலார்பேட்டை புது ஓட்டல் தெரு பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் காதர் கான் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள ஒரு கடையில் வாலிபர் ஒருவர் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

இதனையெடுத்து போலீசார் அவரை கைது செய்து 55 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். விசாரணையில் அவர் அதேப் பகுதியை சேர்ந்த சேட்டு என்பவரின் மகன் ரஞ்சித் (வயது 29) என்பது தெரிய வந்தது. அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com