கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை


கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை
x

கோப்புப்படம்

தினத்தந்தி 21 May 2025 3:35 PM IST (Updated: 21 May 2025 4:40 PM IST)
t-max-icont-min-icon

பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கடந்த 2013ல் நடைபெற்ற கடத்தல் வழக்கில் இருந்து யுவராஜ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2013ல் ஹேமலதா - பாலாஜி ஆகியோர் கடத்தப்பட்ட வழக்கு கடந்த 12 ஆண்டுகளாக ஈரோடு மகளிர் கோர்ட்டில் நடைபெற்று வந்தது.

வழக்கு விசாரணையின் போது யுவராஜ் உள்ளிட்ட 3 பேருக்கும் எதிரான சாட்சிகள் அனைத்தும் பிறழ் சாட்சியாக மாறியதால் அவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் ஏற்கனவே ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால், மீண்டும் கோவை மத்திய சிறைக்கு யுவராஜ் அழைத்துச் செல்லப்பட்டார்.

1 More update

Next Story