10 லட்சம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படும் - எலான் மஸ்க் அறிவிப்பு

10 லட்சம் செயற்கைக்கோள்கள் விண்ணில் நிலை நிறுத்தப்படும் - எலான் மஸ்க் அறிவிப்பு

ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலமாக ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு சொந்தமான செயற்ககைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறார்.
Published on

வாஷிங்டன்,

உலக பணக்காரர்களில் ஒருவரும், டெஸ்லா, எக்ஸ் வலைத்தளம், ஸ்டார்லிங்க் போன்ற நிறுவனங்களுக்கு சொந்தக்காரரும் ஆனவர் எலான் மஸ்க். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தை நிறுவி விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபடுகிறார்.

ஏற்கனவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மூலமாக ஸ்டார்லிங்க் நிறுவனத்துக்கு சொந்தமான செயற்ககைக்கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறார். இதன்மூலம் உலகெங்கிலும் அதிவேக இணைய வசதி கிடைக்க ஸ்டார்லிங்க் நிறுவனம் திட்டமிட்டது.

தற்போது நடப்பு நிதியாண்டில் ஸ்பேஸ் எக்ஸ் மூலமாக விண்ணில் 10 லட்சம் செயற்கைக்கோள்களை நிலை நிறுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக எலான் மஸ்க் அறிவித்தார். தனது நிறுவனங்களுக்கான செயற்கை நுண்ணறிவு அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த முயற்சி மேற்கொள்வதாக அவர் அறிவித்துள்ளார்.

X

Dailythanthi
www.dailythanthi.com