தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி


தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி
x
தினத்தந்தி 11 Nov 2024 5:24 PM IST (Updated: 11 Nov 2024 6:17 PM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி, இன்று அதே பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உகுவாகக்கூடும். இது அதற்கடுத்த இரண்டு தினங்களில் மேற்கு திசையில், தமிழக இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் தற்போது தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த இரண்டு நாட்களில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகம் நோக்கி நகரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் 15-ந்தேதி வரை கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story