காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்


காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்
x
தினத்தந்தி 25 Nov 2025 7:45 AM IST (Updated: 25 Nov 2025 7:45 AM IST)
t-max-icont-min-icon

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது தெற்கு வங்கக்கடலில் அடுத்த 48 மணிநேரத்தில் புயல் உருவாகக்கூடும். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை - தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தேனி, ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story