தமிழகத்தில் 7 இடங்களில் சதம் அடித்த வெயில்

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105.8 (41 செல்சியஸ்) டிகிரி வெப்பம் பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் 7 இடங்களில் சதம் அடித்த வெயில்
Published on

சென்னை,

தமிழகத்தில் இந்த ஆண்டு பிப்ரவரி கடைசியில் இருந்தே வெயில் உக்கிரம் காட்ட தொடங்கிவிட்டது. அதன் தொடர்ச்சியாக தற்போது கோடை காலம் தொடங்கி வறுத்தெடுத்து வருகிறது. எல்நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

மார்ச் முதல் வாரத்திலேயே தமிழ்நாட்டில் சில இடங்களில் வெயில் 100 டிகிரியை தொட ஆரம்பித்துவிட்டது. வழக்கமாக வெயில் உக்கிரம் காட்டும் இடமான வேலூரில்தான் இந்த ஆண்டும் வெயில் முதலில் 100 டிகிரியை தொட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போது உள் மாவட்டங்களிலும் வெப்பம் வாட்டி வதைக்க ஆரம்பித்துள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழகத்தில் 7 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 105.8 (41 செல்சியஸ்) பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.

மேலும் வெயில் சதமடித்த இடங்களின் விவரம் வருமாறு:-

  1. கரூர் பரமத்தி - 105.8 டிகிரி (41 செல்சியஸ்)

  2. ஈரோடு - 104 டிகிரி (40 செல்சியஸ்)

  3. வேலூர் - 102.74 டிகிரி (39.3 செல்சியஸ்)

  4. நாமக்கல் - 102.02 டிகிரி (38.9 செல்சியஸ்)

  5. மதுரை விமான நிலையம் - 101.12 டிகிரி (38.4 செல்சியஸ்)

  6. திருப்பத்தூர் - 101.84 டிகிரி (38.8 செல்சியஸ்)

  7. பாளையங்கோட்டை - 101.48 டிகிரி (38.6 செல்சியஸ்)

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com