தமிழகத்தில் வெப்ப அலைக்கு வாய்ப்பு

அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வெப்ப அலைக்கு வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தில் வடகிழக்கு மாவட்டங்களில் இன்று வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

கடலோர ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வரும் 19ம் தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இன்று முதல் வரும் 15ம் தேதி வரை 2-4 செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்ப அலை வீச வாய்ப்பு உள்ளது. அதிக வெப்ப நிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் அசௌகரியம் ஏற்படலாம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com