மே 14ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


மே 14ல் 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 10 May 2025 2:38 PM IST (Updated: 10 May 2025 3:46 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் மே 14-ம் தேதி நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை

தமிழ்நாட்டில் மே மாதம் 4-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை 25 நாட்களுக்கு அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் காலம் நீடிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த நாட்களில் கத்திரி வெயிலின்போது தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெப்பநிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டிச் செல்லும். இந்த நிலையில் நேற்று தமிழ்நாட்டில் மதுரை விமான நிலையம்- 105.8 டிகிரி பாரன்ஹீட், ஈரோடு- 104.36 டிகிரி பாரன்ஹீட், கரூர் பரமத்தி- 104 டிகிரி பாரன்ஹீட், மதுரை மாநகரம்- 101.84 டிகிரி பாரன்ஹீட், பாளையங்கோட்டை- 101.3 டிகிரி பாரன்ஹீட், திருச்சி- 101.3 டிகிரி பாரன்ஹீட், சென்னை மீனம்பாக்கம்- 100.4 டிகிரி பாரன்ஹீட் எனறு இந்த 7 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவானது.

இந்த நிலையில் தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் மே 14-ம் தேதி நீலகிரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழ்நாட்டில் மே 13, 14ல் இடி, மின்னலுடன் 40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story