தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு

மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களுக்கு சுற்றுலா செல்வதை தவிர்க்குமாறு தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் அறிவுறுத்தி உள்ளார்.
தமிழ்நாட்டில் 10 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு
Published on

சென்னை,

தமிழ்நாட்டின் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் நாளை முதல் 10 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறியுள்ளார். கோவை - வால்பாறை, நீலகிரி- கூடலூர், கன்னியாகுமரியில் மிக கனமழை பெய்யக்கூடும் என்றும் சில இடங்களில் 20 செ.மீ வரைக்கும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளார். நீலகிரி, வால்பாறை, சிக்மகளூர் பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் சுற்றுலா செல்லும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com