தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்

தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
தென் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்
Published on

சென்னை,

தமிழகத்தில் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. பொதுவாக கத்திரி வெயில் காலம் கோடை காலத்தின் உச்சமாக பார்க்கப்படும். இந்த கால கட்டங்களில் வெப்பம் பெருமளவில் அதிகரிக்கும்.

அதன்படி, கத்திரி வெயில் தொடங்கிய பிறகு மேலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்குமோ? என்று பேசப்பட்டது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் வெப்பம் குறைந்தே காணப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது இலங்கையொட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த 2 தினங்களாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.

இதன் தொடர்ச்சியாக வங்கக்கடல் பகுதியில் நிலவும் காற்று சுழற்சி, தாழ்வுப்பகுதியாக உருவாக உள்ளது. இதற்கிடையில் கிழக்கு காற்று ஊடுருவல் இருப்பதாலும் அடுத்த 4 நாட்களுக்கு தமிழ்நாட்டில் பரவலாக மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக வரும் நாட்களிலும் கோடை வெயிலின் தாக்கம் இருக்காது என்றே சொல்லப்படுகிறது. அப்படி இருந்தாலும் பகலில் வெயில், இரவில் மழை என்ற வானிலையே இருக்கும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக கடலோர, உள்மாவட்டங்களில் நல்ல மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

.

இன்று எங்கெல்லாம் மழை?

இன்று (ஞாயிற்றுக்கிழமை) தென் மாவட்டங்களில் அனேக இடங்களிலும், வடமாவட்டங்களில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், நீலகிரி, கோவை, ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், மதுரை, தேனி, தென்காசி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் பலத்த காற்றுடன் கனமழையும் பெய்யக்கூடும்.

இந்த மழைப்பொழிவு தமிழ்நாட்டில் வருகிற 14-ந்தேதி வரை நீடிக்கும் எனவும், இந்த மழையால் வெப்பம் குறைந்து காணப்படும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

X

Daily Thanthi
www.dailythanthi.com