நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் "ஆரஞ்ச் அலர்ட்"


நீலகிரி, கோவைக்கு இன்றும், நாளையும் ஆரஞ்ச் அலர்ட்
x

கோப்புப்படம்

தமிழகத்தின் இரண்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் இன்றும் (ஜூன் 25), நாளையும் (ஜூன் 26) மிக கனமழை ( ஆரஞ்ச் அலர்ட்) பெய்ய வாய்ப்புள்ளதாகவும், தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் 29-ம் தேதி முதல் 01-07-2025 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை, மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான/ முதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அதிகபட்ச வெப்பநிலையில் 35-36 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலையில் 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story