நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?


நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ள மாவட்டங்கள்...?
x

தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

சென்னை

தென்னிந்திய பகுதிகளின்மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் இடி,மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 8 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, சிவகங்கை, புதுக்கோட்டை, தென்காசி, கோவை, கன்னியாகுமரி, நெல்லை ஆகிய 6 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதேபோல், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 2 மாவட்டங்களில் நள்ளிரவு 1 மணிவரை லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story