

சென்னை,
தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 19 மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று மாலை 4 மணி வரை இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர்
தருமபுரி
திண்டுக்கல்
கன்னியாகுமரி
கரூர்
கிருஷ்ணகிரி
மதுரை
புதுக்கோட்டை
சேலம்
சிவகங்கை
தென்காசி
தஞ்சாவூர்
தேனி
நீலகிரி
திருவாரூர்
திருச்சிராப்பள்ளி
திருநெல்வேலி
திருப்பூர்
விருதுநகர்
மேற்கண்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.