இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?

27 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் எவை?
Published on

சென்னை,

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் காற்றழுத்த தாழ்வுப் பாதை காரணமாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இதன் அடிப்படையில், தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டங்களின் பட்டியல் பின்வருமாறு:

  1. அரியலூர்

  2. கோயம்புத்தூர்

  3. கடலூர்

  4. தருமபுரி

  5. திண்டுக்கல்

  6. கள்ளக்குறிச்சி

  7. கன்னியாகுமரி

  8. மதுரை

  9. மயிலாடுதுறை

  10. நாகப்பட்டினம்

  11. நாமக்கல்

  12. பெரம்பலூர்

  13. புதுக்கோட்டை

  14. ராமநாதபுரம்

  15. சேலம்

  16. சிவகங்கை

  17. தென்காசி

  18. தஞ்சாவூர்

  19. தேனி

  20. நீலகிரி

  21. திருவாரூர்

  22. தூத்துக்குடி

  23. திருச்சிராப்பள்ளி

  24. திருநெல்வேலி

  25. திருவண்ணாமலை

  26. விழுப்புரம்

  27. விருதுநகர்

மேற்கண்ட மாவட்டங்களின் சில பகுதிகளில் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com