மாலை 4 மணி வரை எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு..?

மாலை 4 மணி வரை குறிப்பிட்ட மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தென்தமிழகத்தில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. அந்த வகையில், தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும், நாளை (2-ந்தேதி) தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் தமிழகத்தில் மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:-

தேனி,

விருதுநகர்,

தென்காசி,

திருநெல்வேலி.

லேசான மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள்:-

நாகப்பட்டினம்,

திருவாரூர்,

தஞ்சாவூர்,

நீலகிரி,

கோயம்புத்தூர் .

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com