ஜிம்பாப்வே நாட்டில் சாலை விபத்தில் 11 பேர் சாவு

ஜிம்பாப்வே நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.
ஜிம்பாப்வே நாட்டில் சாலை விபத்தில் 11 பேர் சாவு
Published on

ஹராரே,

ஜிம்பாப்வே நாட்டின் மாஷோனாலேண்ட் கிழக்கு மாகாணத்தில் உள்ள முடோகோ நகர் அருகே ஆம்னி பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென டயர் பஞ்சர் ஆனதால், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ள 15 பேரில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com