ஆப்கானிஸ்தானில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் சுட்டுக்கொலை - தலீபான்கள் அட்டூழியம்

ஆப்கானிஸ்தானில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் தலீபான்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் சுட்டுக்கொலை - தலீபான்கள் அட்டூழியம்
Published on

காபூல்,

ஆப்கானிஸ்தானில் 19 ஆண்டுகளுக்கு மேலாக தலீபான் பயங்கரவாதிகளுக்கும் அந்த நாட்டு அரசுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. தலீபான் பயங்கரவாதிகளின் கொட்டத்தை ஒடுக்க அந்த நாட்டு ராணுவம் கடுமையாக போராடி வருகிறது.

அதேசமயம் தலீபான்களின் ஆதிக்கம் மிகுந்த பல மாகாணங்களில் பொதுமக்களில் ஒரு பிரிவினர் போராளிகளாக மாறி அரசுக்கு ஆதரவாக தலீபான் பயங்கரவாதிகளின் சண்டையிட்டு வருகின்றனர். ஆயுதம் ஏந்திய அரசு சார்பு போராளிகளுக்கும் தலீபான் பயங்கரவாதிகளுக்கும் இடையே அவ்வப்போது பயங்கர மோதல் சம்பவங்கள் ஏற்படுகின்றன.

இந்த நிலையில் ஆப்கானிஸ்தானில் வடகிழக்கு பகுதியில் உள்ள தாக்கர் மாகாணத்தில் லால குஷார் என்ற இடத்தில் அரசு சார்பு போராளிகளை குறி வைத்து தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். அதனைத் தொடர்ந்து போராளிகள் தங்களது துப்பாக்கிகளால் பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுத்தனர். இரு தரப்புக்கும் இடையே பல மணி நேரமாக கடுமையான துப்பாக்கி சண்டை நீடித்தது.

எனினும் பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டதில் அரசு சார்பு போராளிகள் 13 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பல போராளிகள் படுகாயமடைந்தனர். இந்த மோதலில் தலீபான் பயங்கரவாதிகள் தரப்பிலும் உயிரிழப்பு ஏற்பட்டதாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. எனினும் எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என்பது குறித்த உறுதியான தகவல் இல்லை.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com