ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் பலி

ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.
ஆப்கானிஸ்தானில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 15 போலீசார் பலி
Published on


* ஆப்கானிஸ்தானின் குண்டூஸ் மாகாணத்தில் போலீஸ் சோதனை சாவடி மீது தலீபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 15 போலீசார் கொன்று குவிக்கப்பட்டனர்.

* ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நேற்று முன்தினம் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்பெற்று வருகிறார்.

* ஹாங்காங்கில் ஏற்றுக்கொள்ள முடியாத வன்முறை அரங்கேறி வருவதாகவும், அங்கு நடந்து வருவது அமைதியான போராட்டம் இல்லை என்றும் கூறி சீன வெளியுறவு மந்திரி வாங் யீ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

* ஈராக்கின் சலாலுதின் மாகாணத்தின் தலைநகர் திக்ரித்தில் உள்ள போலீஸ் நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் 4 பேர் பலியாகினர். மேலும் 5 பேர் பலத்த காயம் அடைந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com