தேர்வில் மதிப்பெண் குறைவு: தட்டிக் கேட்ட தாய், தந்தை, தம்பியை சுட்டுக் கொன்ற சிறுவன்..!

தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை தட்டிக் கேட்ட தாய், தந்தை, தம்பியை சிறுவன் சுட்டுக் கொன்றுள்ளான்.
தேர்வில் மதிப்பெண் குறைவு: தட்டிக் கேட்ட தாய், தந்தை, தம்பியை சுட்டுக் கொன்ற சிறுவன்..!
Published on

மாட்ரிட்,

ஸ்பெயினில் பெற்றோரையும் 10 வயது சகோதரனையும் 15 வயது சிறுவன் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கிழக்கு துறைமுக நகரமான அலிகாண்டேவிலிருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எல்சேக்கு பகுதியில் கடந்த செவ்வாய்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை இறந்த பெண்ணின் சகோதரி அந்த வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அவரது சகோதரி, கணவர் மற்றும் 10 வயது குழந்தை என அனைவரும் இறந்து கிடந்துள்ளனர். அவர்களது 15 வயது மகன் மட்டும் உயிருடன் இருந்துள்ளான். அந்த சிறுவன் தனது தந்தை, தாய் மற்றும் சகோதரனைக் கொன்றதாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளான். இதையடுத்து அந்த பெண் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் 3 நாட்களாக சடலங்களுடன் வீட்டில் தனியாக இருந்த 15 வயது சிறுவனை கைது செய்தனர். முதல் கட்ட விசாரணையில் சிறுவன், பள்ளியில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதாகவும் அதனால் அவனது தாயுடன் பிரச்சினை ஏற்பட்டதாகவும் கூறியுள்ளான்.

அதன் பிறகு அவனுடைய தந்தையின் வேட்டையாடும் துப்பாக்கியைப் பயன்படுத்தி அவனது தாய், சகோதரன், தந்தை என 3 பேரையும் சுட்டுக் கொன்றுள்ளான்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com