சிரியாவில் அமெரிக்க ராணுவ தாக்குதலில் 19 ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் சாவு

சிரியாவில் அமெரிக்க ராணுவ தாக்குதலில் 19 ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் பலியாயினர்.
சிரியாவில் அமெரிக்க ராணுவ தாக்குதலில் 19 ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் சாவு
Published on

சிரியாவில் ஐ.எஸ்., ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்புகள் போன்றவை அந்த நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளன. பயங்கரவாதத்தை கட்டுப்படுத்துவதற்காக சிரியாவுக்கு பக்கபலமாக அமெரிக்கா பல்வேறு ராணுவ உதவிகளை செய்து வருகிறது. அதன்படி வடகிழக்கு சிரியாவின் ஹசாகே நகரில் உள்ள ராணுவ தளத்தில் அமெரிக்க படைகள் முகாமிட்டுள்ளன.

இந்த ராணுவ தளம் மீது ஈரான் ஆதரவு பயங்கரவாதிகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு டிரோன் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வந்த ஒப்பந்த ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பதிலடியாக அமெரிக்க ராணுவம் ஈரான் ஆதரவு பயங்கரவாதிகளின் நிலைகள் மீது வான்வழி தாக்குதலை தொடுத்தது. இதன் சேத விவரங்கள் தெரியாமல் இருந்து வந்தது. இந்த நிலையில் சிரியாவில் அமெரிக்க ராணுவம் நடத்திய வான்தாக்குதலில் ஈரான் ஆதரவு பயங்கரவாத அமைப்பை சேர்ந்த 19 பேர் பலியானதாக அமெரிக்க ராணுவ மந்திரி லாயிட் ஆஸ்டின் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com